Tuesday, August 7, 2007

தமிழ்நாட்டில் இரண்டு சூரியன்!


ஆம், இனி தமிழ் தொலைகாட்சி பட்டியலில் இரண்டு சூரியன். ஒன்று, ஏற்கெனவே இருக்கும் சன் டிவி.. மற்றோன்று புதிதாக வரவிருக்கும் கலைஞர் டிவி. இது மாறன் சகோதரர்கள் மற்றும் கலைஞர் மோதலால் முலைக்கும் தொலைக்காட்சி.
இது தி.மு.க வின் அதிகாரபூர்வ சேனலாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்து.
சிவாஜி, தசாவதாரம் போன்ற பெரிய படங்களை வாங்கி விட்டதாக பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமில்லாமல், மெகா தொடருக்காக குஷ்பு, இசைஞானி இளையராஜா, பாலசந்தர் போன்ற பிரபலங்கள் இந்த டிவிக்காக முன்வந்து உள்ளார்கள்.

இதற்கு பிறகு, மெகா டிவி, வசந்த் டிவி, ஜெயா ப்ளஸ், என்று சேனல்கள் வரிசையாக இந்த வருடதிற்குள் வந்து விடும். வந்தால், தமிழ் சேனல்களின் எண்ணிக்கை 20 ஆகிவிடும்.

தமிழ் டிவி ரசிகர்களுக்கு கொண்டட்டம் தான்!~

இந்தியாவில் வேலை வாய்ப்பு!?

சில நாட்களாக, சென்னை மாநகரில், வெள்ளைகாரர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
என்ன விசயம் என்று ஒரு வெள்ளைகார பெண்னை நிறுத்தி கேட்டேன், அதற்கு அவள் செர்பியாவில் இருந்து வந்து இருப்பதாகவும், இங்கு ஒரு நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்து இருப்பதாகவும் சொன்னால். மேலும் விசரித்ததில், தென்னிந்தியாவிர்க்கு மட்டும் 1500 வெளிநாட்டினர் வந்து இருப்பதாக கூறினார்.
அதும் இல்லாமல் அவர்களுக்கு இந்தியா எல்லா விததிலும் மலிவாக இருக்கிறதாம்.
என் கேள்வி என்ன என்றால், இங்கு இருப்பவர்க்கே முழு வேலைவாய்ப்பு இல்லை, இதில் எப்படி இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டினர்க்கு வேலை வாய்ப்பு தருகிறது?

Friday, July 6, 2007

பாஸ்... பேர கேட்டாலே சும்மா அதிருது இல்ல!...

பாஸ்... பேர கேட்டாலே சும்மா அதிருது இல்ல!...
படம் பாத்தா இன்னும் அதிரும். இந்தியாவின் நம்பர் 1 படம்.


அதும் அந்த ஸ்டைல் பாட்டு இருக்கே, அத முதல் முறை பாத்தா போது சும்மா மிரண்டுடேன், நாமலும் இந்த மாறி கலரா மாறினா எப்படி இருக்கும்னு நெனச்சேன், அப்புறமா தான் தெரியும் அது கிராபிக்ஸ் வேலைன்னு.. அந்த தகவல இந்த லிங்க்ல பாருங்கோ!
முதல் தடவையா நம்ம தலைவர் படத்த முதல் நாள் பாத்தேன்.. அதும் டெல்லி ல.. அங்க கூட நம்ம தலைவருக்கு நிறைய்ய ரசிகர்கள் பா!

இந்த படத்த பத்தி ஒரு CNN IBN நிருபர் நாய் தேவை இல்லாம கமேன்ட் அடிச்சி மாட்டிக்கிச்சு, அவ வாய் விட்டு, நம்ம ரசிகர்கள் எல்லாம் REPLY மேல REPLY குடுத்து, இப்போதைக்கு 1000 comment மேல ஆகி இருக்கு. தேவையா அவளுக்கு? நீங்களும் முடிஞ்சா திட்டுங்க!

இங்க பாருங்க பி.பி.சி கூட அதிருது இல்ல!

எப்படியோ, படம் நிச்சயமா 1000 நாள் தான்!


சூப்பர் ஸ்டார்,
பேர கெட்டாலே சும்மா அதிருது இல்ல!!

Saturday, May 26, 2007

ஆட்டோ மீட்டர்!

சென்னை ஆட்டோ என்றால் நம் நினைவுக்கு வருவது மீட்டர் சூடு தான். அப்படியாவது மீட்டரை ஓட்டி வந்த ஆட்டோ ஒட்டுனர்கள், சில வருடமாக மீட்டரையே மறந்து விட்டார்கள்.
இதொ ஒரு எடுத்துக்காட்டு!


தற்பொது உள்ள அரசு, மிக திட்டவட்டமாக, புதிய டிஜிட்டல் மீட்டர் எல்லா ஆட்டோகளிலும் பொருத்த வேண்டும் என்று கூறிய பிண்பு, புதிய ஆட்டோ கட்டணம் அட்டவணை கொடுத்தும் கூட, யாரும் பின்பற்றுவது இல்லை!
சென்ற வாரம், நான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையதில் இருந்து அண்ணா நகர் வர, ரூ.120 தர வேண்டியது ஆயிற்று. அரசு வெளியிட்ட அட்டவணை படி பார்த்தால் இதற்கு ரூ.75 முதல் ரூ.80 வரையே ஆகும்.

எனக்கு தெரிந்த வரை, பம்பாய், புது தில்லி,ஹைதராபாத் விட சென்னை ஆட்டோ கட்டணம் மிக மிக அதிகம்!

Tuesday, May 15, 2007

மாறன் VS கருணாநிதி வாரிசுகள்!

எனது இரண்டாவது கட்டுரையே அரசியல் பற்றி எழுத வேண்டியது ஆகி விட்டது. வேறு எதை பற்றி மாறன் குடும்பத்துக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் நடக்கும் போட்டியை பற்றி தான்.
மதுரை தினகரன் தாக்குதல் சம்பவத்தின் எதிர்பாராத திருப்புமுனையாக தயாநிதி மாறனின் ராஜினாமா வரை வந்துள்ளது.

இந்த சம்பவத்தில், முதல்வரின் பேச்சை மீறி, பிரச்சனைக்கு காரணமான அந்த கருத்துகணிப்பை வெளியிட்டது கலாநிதியின் தவறு தான்.
சன் குழுமம், இவ்வளவு பெரிய ஸ்தாபனமாக வளர்வதற்க்கு காரணம் தி.மு.க மற்றும் கலைஞர் என்பது மறுக்க முடியாத உண்மை. இல்லாமலா சன் குழுமத்தின் வர்த்தக அலுவலகம், தி.மு.க அறக்கட்டளைக்கு சொந்தமான அறிவாலயதில் செயல்படும்? இதற்காவது கலாநிதி, அவரின் தாத்தா பேச்சை இந்த கருத்து கணிப்பு விசயத்தில் கேட்டு இருக்கலாம்.

இது இப்படி இருக்க, ஒன்றுமே செய்யாத தயாநிதி எதற்கு பலி கெடா ஆனார்? இந்த ராஜினாமாவால், இந்தியா ஒரு திறமையான, இளம் அமைச்சரை இழந்துள்ளது. தமிழ்நாடுக்கு இன்னும் இழப்பு அதிகம் தான்.

இவை இப்படி இருக்க, தினகரன் அலுவலக தாக்குதல் சம்பவம் தொடர்பாக, முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்?

இந்த குடும்ப பிரச்சனை முற்றி மூன்று உயிர்கள் பலியாகி உள்ளன. இது இன்னும் எங்கு சென்று முடியுமோ தெரியவில்லை?

Saturday, April 14, 2007

அகரம்!

அகரம்..
வள்ளுவன் ஆரம்பித்த சொல். அவ்வாறே அடியெனும் ஆரம்பிக்க ஆசை. கடந்த 4 மாதங்களாக ஆங்கிலத்தில் இடுக்கை நடத்தி வந்தேன். சற்று அனுபவம் கிட்டியது. இதோ என் தாய் மொழியில், எனது பணிகள்.
தமிழை கொலை செய்யாமல் இருந்தால் சரி என்கிறீர்களா... அதுவும் சரி தான், முடிந்த வரையில், அப்படி ஆகாமல் பார்த்து கொள்கிறேன். சற்று தாமதமாக தொடங்கியதற்க்கு இதுவும் ஒரு காரணம். ஹி.. ஹி..
சரி முதல் பதிவிலேயே அறுவை வேண்டாம், இத்துடன் முடித்து கொள்கிறேன்.
அதற்கு முன் அனைவருக்கும்,
எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி!
வணக்கம்.